கூரை வீட்டில் தீ விபத்து ரூ.1 லட்சம் பொருட்சேதம்

கெங்கவல்லி: கெங்கவல்லி, நடுவலுாரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது கூரை வீட்டில் ராமாயி, 45, என்பவர் வாடகைக்கு வசிக்கிறார்.

நேற்று மதியம், 2:00 மணிக்கு அந்த வீட்டில் தீ விபத்து ஏற்பட்-டது. இதுகுறித்து தகவல் கிடைத்து, 20 நிமிடத்தில் அங்கு வந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். இதில் வீட்டில் இருந்த துணிகள், பாத்திரங்கள், ஆவணங்கள் என, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டது. தீப்பற்றியது எப்படி என, கெங்கவல்லி போலீசார்
விசாரிக்கின்றனர்.

Advertisement