கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.150க்கு விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, சிந்தலவாடி, மகாதானபுரம், கருப்பத்துார், பொய்கைப்புத்துார் உள்ளிட்ட பகுதிகளில், வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது.

வாழைத்தார்கள் அறுவடை செய்யும் விவசாயிகள், லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று நடந்த ஏலத்தில் பூவன் வாழைத்தார், 200 ரூபாய், கற்பூரவள்ளி, 150 ரூபாய், ரஸ்தாளி சிறிய வாழைத்தார், 275 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.

Advertisement