சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை வழிபாடு

கடலுார் : ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணியர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கடலுார், புதுவண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி மாத கிருத்திகையொட்டி மகா மண்டபத்தில் சிறப்பு யாகம், பூஜைகள் நடந்தன. இதனைதொடர்ந்து வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு பால், பன்னீர், தேன், சந்தனம் உள்ளிட்ட 27 அபிஷேக பொருள்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேப் போன்று, திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர், புதுப்பாளையம் சுப்ரமணியர் உட்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியல் பிரச்னைகளில் அமலாக்கத்துறையை பயன்படுத்தக் கூடாது: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
-
வங்கதேச விமானப்படை ஜெட் விமானம் பள்ளியில் விழுந்து நொறுங்கியது; ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்
-
திறந்து ஓராண்டு மட்டுமே ஆன பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்தது; அரசுக்கு அண்ணாமலை கேள்வி
-
2025ம் ஆண்டு செஸ் உலகக் கோப்பை; இந்தியாவில் நடைபெறும் என அறிவிப்பு
-
தி.மு.க.,வினருக்கு பதற்றம்; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
-
மும்பையில் ஓடுபாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்
Advertisement
Advertisement