திருவிழாவில் பங்கேற்க அனுமதிக்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: கீழக்கரை அடுத்த நல்லிருக்கை கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட தேவேந்திரகுலவேளாளர் குடும்பங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு நடந்த திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் 15 குடும்பங்களை கோயில் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.

இந்த ஆண்டு விரைவில் திருவிழா நடக்கவுள்ளதால் எங்களையும் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் சிம்ரன் ஜீதி சிங் காலோனிடம் 20க்கும் மேற்பட்டோர் மனு கொடுத்தனர்.

Advertisement