திருமணமாகாத விரக்தியில் இளைஞர் தற்கொலை
புதுக்கோட்டை: திருமணமாகாத விரக்தியில், இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே மேலதொட்டியபட்டி பெரியகுளம் பகுதியில், எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக, விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் மேலதொட்டியபட்டியைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளி முரளி, 33, என்பதும், நீண்ட நாட்களாக அவருக்கு பெண் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.
இதில், விரக்தியடைந்த முரளி, நேற்று முன்தினம், வீட்டின் அருகே பெரியகுளம் பகுதியில் உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
விராலிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
யாரோ செய்த தவறுக்கு தேர்வுக்கு தயாரான இளைஞர்கள் பலியா: அண்ணாமலை கேள்வி
-
லாக்கப் மரண வழக்கு: தண்டனையை எதிர்த்த போலீசாரின் மனு தள்ளுபடி
-
வீரத்தின் விளை நிலம் ஆசாத்
-
பெங்களூரு பஸ் ஸ்டாண்டில் வெடிபொருட்களுடன் கிடந்த பை; பீதியில் மக்கள்
-
அல்கொய்தா பயங்கரவாதிகள் 4 பேர் கைது: குஜராத் போலீசார் அதிரடி
-
அயர்லாந்தில் பயங்கர துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு; 2 பேர் படுகாயம்
Advertisement
Advertisement