சாலை பாதுகாப்பு பொறியாளர் ஆய்வு

பழநி : பழநி புது தாராபுரம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்ட நிலையில் சின்னார் கவுண்டன் வலசு பிரிவு அருகே ரூ.80 லட்சத்தில் சாலை அகலப்படுத்தி பாலம் கட்டும் பணிக்கு திட்டமிடப்பட்டது.

இதை நெடுஞ்சாலை துறை சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் தங்கராஜ் ஆய்வு செய்தார்.

அவருடன் மதுரை கோட்ட பொறியாளர் வரலட்சுமி, கோட்ட பொறியாளர் குமணன்,உதவிக்கோட்ட பொறியாளர் பாபுராமன், உதவி பொறியாளர் அன்பையா உடன் இருந்தனர்.

Advertisement