பெண்ணிடம்  செயின் பறித்த வாலிபர் கைது 

கண்டமங்கலம்: விழுப்புரம் மாவட்டம், விக் கிரவாண்டி போலீஸ் சரகம் எம்.குச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் சரசு, 57; இவர், கடந்த 20ம் தேதி மதுரப்பாக்கம் குச்சிப்பாளையத்தில் இருந்து தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்றார்.

கொடுக்கூர் ஏரிக்கரை சாலையில் உள்ள பிள்ளையார்கோவில் அருகே வேகத்தடையை கடக்க முயன்றபோது, பின்னால் அவர்களை கண்காணித்து வந்த ஒரு வாலிபர் சரசு கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறித்தார். அவர் சுதாரித்து செயினை இறுக பிடித்தார். ஆனாலும், 2 சவரன் அளவிற்கு செயினை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் அந்த வாலிபர் தப்பிச்சென்றுவிட்டார்.

இது குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, வளவனுார் போலீஸ் சரகம் குமளம் மேட்டுத்தெருவை சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் 23; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 சவரன் செயின், பைக் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisement