ஈட்டி எறிதல்: தீபிகா சாதனை

சங்ரூர்: ஈட்டி எறிதலில் (20 வயது) இந்திய வீராங்கனை தீபிகா தேசிய சாதனை படைத்தார்.
பஞ்சாப்பில், இந்திய ஓபன் தடகள போட்டி நடந்தது. பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியாவின் தீபிகா பங்கேற்றார். ஐந்து மாதங்களுக்கு பின் போட்டிக்கு திரும்பிய இவர், 6 வாய்ப்பிலும் தலா 50 மீ.,க்கு மேல் எறிந்தார். இதில் 3 வாய்ப்பில், தலா 54 மீ.,க்கு மேல் எறிந்தார். முதல் வாய்ப்பில் அதிகபட்சமாக 56.41 மீ., எறிந்த தீபிகா முதலிடத்தை தட்டிச் சென்றார். தவிர, 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தனது தேசிய சாதனையை முறியடித்தார். இதற்கு முன், கடந்த ஆண்டு 54.98 மீ., எறிந்திருந்தார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் திபான்ஷு சர்மா 19, முதலிடம் பிடித்தார். இவர், அதிகபட்சமாக 76.03 மீ., எறிந்தார். மற்ற போட்டிகளில் சர்வேஷ் (நீளம் தாண்டுதல், 2.26 மீ.,), சீமா (வட்டு எறிதல், 55.03 மீ.,), கிர்பால் சிங் (வட்டு எறிதல், 54.65 மீ.,) முதலிடத்தை கைப்பற்றினர்.
மேலும்
-
பி.எஸ்.எப்., வீரர்களுக்கு நவீன கேமரா வழங்கல்
-
உரிமைகளை குடிமக்கள் தெரிந்து கொள்வது முக்கியம்: தலைமை நீதிபதி
-
ஊட்டி அருகே முழு கொள்ளளவை எட்டிய அவலாஞ்சி அணை திறப்பு
-
சோழ பேரரசர்களான ராஜராஜனும், ராஜேந்திரனும்... பாரதத்தின் அடையாளம்! ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி புகழாரம் இருவருக்கும் பிரமாண்ட சிலை நிறுவப்படும் என பேச்சு
-
ரேஷன் கடையை உடைத்து அரிசி மூட்டை துாக்கி சென்ற காட்டு யானை அச்சத்தில் மசினகுடி பகுதி மக்கள்
-
தென்னை சார் உணவுப்பொருட்கள் ஏற்றுமதி; பிரிட்டனுடனான ஒப்பந்தத்தால் அதிகரிக்கும்