இலவச கண் சிகிச்சை முகாம்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், நேற்று மக்கள் சக்தி தொண்டு அறக்கட்-டளை, கனரா வங்கி, வீரபத்ர சுவாமி கோவில் நல அறக்கட்ட-ளைகள், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதவியுடன், 37ம் ஆண்-டாக இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின. நாமக்கல் மாவட்ட சுகாதார சேவைகள் இணை இயக்குனர் ராஜ்மோகன் துவக்கி வைத்தார். ஓய்வுபெற்ற அரசு உதவி செயற்பொறியாளர் ஜவஹர் தலைமை வகித்தார்.


மக்கள் சக்தி தொண்டு அறக்கட்டளை நிறுவனர் சாய் பாலமு-ருகன், கனரா வங்கி சீனியர் மேனேஜர் சுகன்யா ஆகியோர் முன்-னிலை வகித்தனர். துணை தலைவர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார். செயலாளர் பாலமுருகன் நன்றி தெரிவித்தார். முகாமில், 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதில், 65 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை, இன்று காலை சேலம் அரவிந்த் கண் மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

Advertisement