ராஜா தேசிங்கு சிலை நிறுவ அரசுக்கு கோரிக்கை
ஓசூர்: ஓசூரில் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்க மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் மற்றும் குடும்ப விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் இந்தர் சிங் தலைமை வகித்தார். மாநில தலைவர் பவானி சிங் முன்னிலை வகித்து, 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிய-ருக்கு உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்-கினார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பேசினார்.
கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கட்டப்பட்-டுள்ள தேசிங்கு ராஜன் கோவிலின் உள்ளே தயார் நிலையி-லுள்ள ராஜா தேசிங்கு உருவ சிலையை நிறுவ, தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்க வேண்டும். ராணிப்பேட்டையில் நடந்து வரும், ராஜா தேசிங், ராணி பாய் நினைவு சின்னங்களின் புனரமைப்புக்கு பின் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு குழுவில், தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்திற்கு உரிய பிரதிநிதித்-துவம் வழங்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, இலவச மருத்துவ முகாம் மற்றும் வரன் பார்க்கும் இலவச கல்யாண கேந்திரா நிகழ்ச்சி நடந்தது.
மேலும்
-
கட்சி ஆரம்பிச்சு ஒன்னுமே இல்ல... அதுக்குள்ள X,Y,Z பிரிவு பாதுகாப்பு; சீமான் பாய்ச்சல்
-
2040ல் விண்வெளி துறையில் இந்தியா முதன்மை நாடாக மாறும்; இஸ்ரோ தலைவர் நாராயணன் உறுதி
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம்; வரி 15% குறைப்பு: அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
45,788 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கல் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
-
போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு
-
ராயனுார் சாலையில் 'இருட்டு' கூடுதல் மின்விளக்கு தேவை