அ.தி.மு.க., பொதுசெயலாளர் நாளை சிவகங்கையில் பயணம்

சிவகங்கை : 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணம் மூலம் அ.தி.மு.க., பொது செயலாளர் பழனிசாமி நாளை சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார் என சிவகங்கை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, நாளை மாலை 4:30 மணிக்கு காரைக்குடி ஐந்து விளக்கு சமீபம் எம்.ஜி.ஆர்., சிலை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார்.

பிரசார வாகனம் மூலம் திருப்புத்துார் வரும் அவர், மாலை 5:030 மணிக்கு அண்ணாதுரை சிலை அருகேயும், இரவு 7:45 மணிக்கு சிவகங்கை அரண்மனைவாசல் முன் மக்களை சந்தித்து பேசுகிறார்.

சிவகங்கையில் அன்று இரவு தங்குகிறார். ஜூலை 30 அன்று காலை 10:00 மணிக்கு சிவகங்கை சன்ராக்ஸ் மகாலில் வெளிநாடுவாழ் இந்தியர்கள், மஞ்சுவிரட்டு, பந்தயம், வடமாடு நல சங்கங்கள், விவசாய சங்கம், விளையாட்டு வீரர்கள், தென்னை நார் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அன்று மாலை 4:30 மணிக்கு மானாமதுரை முத்துராமலிங்க தேவர் சிலை அருகே மக்களை சந்தித்து பேசுகிறார்.

அ.தி.மு.க., அனைத்து அணி, பிரிவு நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும், என்றார்.

Advertisement