வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

ஓசூர், மதுரை வக்கீல் வாஞ்சிநாதன் மீது போடப்பட்ட அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோளுக்கு இணங்

க, ஓசூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன், ஓசூர் வக்கீல்கள் சங்கம் சார்பில், நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் சிவசங்கர் தலைமை வகித்தார். செயலாளர் கதிரவன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அவமதிப்பு வழக்கை திரும்ப பெற வலியுறுத்தி, 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் கோஷங்களை எழுப்பினர்.

Advertisement