கல்லுாரி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு பல்கலை ஆசிரியர்கள் சங்கம், மூட்டா அமைப்புகளின் சார்பில் பணிமேம்பாடு ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் உள்ள மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் முன் நடந்த காத்திருப்பு போராட்டத்தை மூட்டா பொதுச் செயலாளர் செந்தாமரைக் கண்ணன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் பெரியநம்பி, உதவிபெறும் கல்லுாரி அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் லெனின், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, துணைமேயர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். மூட்டா தலைவர் பெரியசாமி ராஜா நிறைவுரையாற்றினார்.

அரசாணை பிறப்பித்து நான்கு ஆண்டுகளாகியும் அரசு உதவிபெறும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணிமேம்பாட்டுப் பயன் இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. அதனை, நிலுவைத் தொகையுடன் உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

Advertisement