இலங்கைக்கு கடத்த இருந்த 2250 கிலோ பீடி இலை பறிமுதல்

ராமநாதபுரம்; ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இலங்கைக்கு கடத்த கன்டெய்னரில் கொண்டு வரப்பட்ட 2250 கிலோ பீடி இலையை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
இலங்கைக்கு பீடி இலை கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை உச்சிப்புளி வெள்ளரி ஓடைப்பகுதியில்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் பைபர் படகில் 10 மூடைகளை ஏற்றியிருந்த கடத்தல்காரர்கள் கியூ பிரிவு போலீசாரை கண்டவுடன் கடலுக்குள் படகுடன் தப்பி ஓடினர்.
கடற்கரையில் நின்றிருந்த கன்டெய்னர் லாரியில் 30 மூடைகளில் இருந்த 2250 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வெள்ளரி ஓடையை சேர்ந்த பாலகிருஷ்ணன் 45, கைது செய்யப்பட்டார்.
இந்த பீடி இலைகளின் மதிப்பு ரூ.25 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆட்சி அதிகாரம் இன்னும் 6 மாதங்கள் தான்; தி.மு.க.,வை சாடிய சீமான்
-
கழிப்பறையில் கூட திமுக அரசு ஊழல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
உலகளவில் பெரும் பேரழிவை உருவாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; ஒரு பிளாஷ்பேக்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுதான் தண்டனை; ஜெய்சங்கர் 'சுளீர்'
-
செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநில கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; அன்புமணி
-
1967, 1977 போன்று 2026ம் ஆண்டு தேர்தல் அமையும்; கணித்து சொல்கிறார் விஜய்
Advertisement
Advertisement