கார் தீக்கிரை குழந்தைகளுடன் தப்பிய தம்பதி

கண்ணகி நகர், கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 30; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று இரவு, ஓ.எம்.ஆர் எனும் பழைய மாமல்லபுரம் சாலையில் 'ரெனால்ட்' காரில் மனைவி, குழந்தைகளுடன் சோழிங்கநல்லுாரில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மேட்டுக்குப்பம் அருகில் சென்றபோது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. சுதாரித்த கிருஷ்ண குமார் சாலையோரம் காரை நிறுத்தி, மனைவி, குழந்தைகளுடன் கீழே இறங்கினார்.

துரைப்பாக்கம் தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால், ஓ.எம்.ஆரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement