காட்டு மாடு முட்டி விவசாயி உயிரிழப்பு

தாண்டிக்குடி; காட்டுமாடு தாக்கி விவசாயி பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம், பூலத்துார் மணி நகரை சேர்ந்தவர் பால்பாண்டி, 30. நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர் ராமகிருஷ்ணன் என்பவரின் டூ வீலரில் பின்னால் அமர்ந்து வந்தார்.

பூலத்துார் கண்ணாடி பங்களா அருகே மேடான பகுதியில் டூ வீலர் திடீரென நிற்க, அதில் இருந்து இறங்கிய பால்பாண்டியை புதரில் மறைந்திருந்த காட்டுமாடு தாக்கியதில் அவர் பலியானார். தாண்டிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

கொடைக்கானல் மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, பால்பாண்டியன் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதியாக, 10 லட்சத்தில் முதற்கட்டமாக 50,000 ரூபாயை வழங்கினர்.

Advertisement