5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் தமிழர் பூபாலனுக்கு கூடுதல் பொறுப்பு

பெங்களூரு : கர்நாடகாவில் 5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ் ஐ.ஏ.எஸ்., பூபாலனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
காத்திருப்போர் பட்டியலில் இருந்த கங்குபாய் ரமேஷ் மனேகர், தொழிலாளர் நலத் துறையின் ஊழியர் காப்பீட்டு திட்ட கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சந்திரசேகர், கர்நாடக பட்டு சந்தைப்படுத்துதல் கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சோமசேகர், ரூரல் மேம்பாட்டு ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
மூத்த குடிமக்களுக்கு மின்னணு சாதனங்கள் வழங்கும் துறையின் இயக்குநராக இருந்த அபர்ணா ரமேஷ், பெங்களூரு வணிக வரி துறையின் சேவை ஆராய்ச்சி பிரிவு ஆணையராக நியமனம்
பெங்களூரு வணிக வரி துறையின் சேவை ஆராய்ச்சி பிரிவு ஆணையர் கனிஷ்கா, பெங்களூரு வணிக வரி துறையின் அமலாக்கப் பிரிவு ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்
அபர்ணா ரமேஷ் வகித்து வந்த மூத்த குடிமக்களுக்கு மின்னணு சாதனங்கள் வழங்கும் துறையின் இயக்குநர் பதவி, இ - கவர்னஸ் சி.இ.ஓ., பூபாலனுக்கு கூடுதல் பொறுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பூபாலன் தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
கோலாரை சேர்ந்த பெண்ணுக்கு இதுவரை கண்டிராத புது வகை ரத்தம்
-
ஆன்லைன் மோசடி வழக்கு: மும்பை ஆசாமிகள் கைது புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடி
-
எலக்ட்ரிக் பைக் பேட்டரி சரி செய்யாத மோட்டார்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு
-
புதுச்சேரி தலைமை செயலகத்தை ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு
-
கொள்ளையடிக்க திட்டம்: நெய்வேலியில் 9 பேர் கைது
-
நெஞ்சுவலியால் ரயில்வே மேலாளர் திடீர் மரணம்