நெல்லை ஆணவக்கொலை வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்: எஸ்.ஐ., கைது

சென்னை: நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்த வழக்கில் குற்றவாளியின் தந்தையான எஸ்.ஐ., சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
@1brதுாத்துக்குடி அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வியின் மகன் கவின் 27. சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். துாத்துக்குடியில் தனியார் பள்ளியில் படித்தபோது உடன் படித்த மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவியுடன் காதல் ஏற்பட்டது. அந்த பெண் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணிபுரிகிறார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட தாத்தாவை காதலி பணியாற்றும் மருத்துவமனைக்கு கவின் அழைத்து சென்றார். ஜூலை 27 மதியம் 3:00 மணிக்கு கவினை சமாதான பேச்சு வார்த்தைக்கு டூவீலரில் அழைத்துச் சென்ற காதலியின் தம்பி சுர்ஜித் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இச்சம்பவம் ஆணவக்கொலையாக கருதப்பட்டது.
தமிழ்ச்செல்வி புகாரின் அடிப்படையில் எஸ்.ஐ.,களான பெண்ணின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணகுமாரி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கொலை செய்த சுர்ஜித் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார். சுதந்திரமான, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்ய இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படுவதாக டிஜிபி கூறியுள்ளார்.
எஸ்.ஐ., கைது
கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ., சரவணனை இன்று இரவு( ஜூலை 30) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து (8)
இராம தாசன் - சிங்கார சென்னை,இந்தியா
30 ஜூலை,2025 - 23:38 Report Abuse

0
0
Reply
Ram - ottawa,இந்தியா
30 ஜூலை,2025 - 20:56 Report Abuse

0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
30 ஜூலை,2025 - 20:33 Report Abuse

0
0
Reply
MARAN - chennai,இந்தியா
30 ஜூலை,2025 - 19:45 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
30 ஜூலை,2025 - 19:09 Report Abuse

0
0
Reply
பேசும் தமிழன் - ,
30 ஜூலை,2025 - 19:06 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
30 ஜூலை,2025 - 18:58 Report Abuse

0
0
Reply
xyzabc - ,இந்தியா
30 ஜூலை,2025 - 17:30 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அமெரிக்காவை நம்பி இந்தியா இல்லை; வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் சசி தரூர் கருத்து!
-
இந்தியா, ரஷ்யா இடையிலான வர்த்தகத்துக்கு குறி; தொடரும் டிரம்பின் மிரட்டல்
-
வட இந்தியாவில் நிகழ்வது போல தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிப்பு; திருமாவளவன் வேதனை
-
தொடர்ந்து முடங்கி வரும் பார்லிமென்ட்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு; முன்னாள் எம்.பி., பிரக்யா தாக்கூர் விடுதலை
-
தறிகெட்டு ஓடிய தண்ணீர் லாரி மோதி பெண் உள்பட 2 பேர் பலி; சென்னையில் சோகம்
Advertisement
Advertisement