'சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்'
சேலம், இந்தியன் ஆயில் நிறுவன தெற்கு மண்டல தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் அறிக்கை:தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, எல்.பி.ஜி., சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கம், ஆக., 1 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது
இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், லாரி உரிமையாளர் சங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டது. இதன்படி, அவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். அதனால் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement