ரூ.1.05 கோடி பரிவர்த்தனை தொழிலாளிக்கு நோட்டீஸ்

உத்தமபாளையம்:கூலி தொழிலாளி வங்கி கணக்கில், 1.05 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டதால், வருமான வரித்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, காமயக்கவுண்டன்பட்டி, கருப்பணன் செட்டியார் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன், 34; விவசாய கூலி. தேனி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து இவருக்கு அனுப்பிய நோட்டீசில், உங்களுடைய பான் எண் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில், 2014 - 2015ம் நிதியாண்டில், 1 கோடியே 5 லட்சத்து 41,000 ரூபாய் டிபாசிட் ஆகியுள்ளது. வருமான வரிச்சட்டம் விவரிக்கப்படாத பணம் பிரிவு, 69அ பிரகாரம் விளக்கம் அளிக்க வேண்டியது தங்களின் கடமை. 2025 ஜூலை, 30ல் நேரில் ஆஜராக வேண்டும்' என, அறிவுறுத்தியிருந்தனர்.

தேனி வருமான வரித்துறை அலுவலகத்திற்கு, நேரில் சென்ற மணிகண்டன், இந்த பரிவர்த்தனைக்கும், தனக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை என எழுதி கொடுத்து, விளக்கம் அளித்தார். இவரது வங்கி கணக்கில், பண பரிவர்த்தனை எப்படி நடந்தது என, விசாரணை நடந்து வருகிறது.

Advertisement