சில வரி செய்திகள்-

* திருநங்கையர், திருநம்பியர் உள்ளிட்ட மூன்றாம் பாலினத்தவர், எந்தவகை பள்ளிகளில் படித்திருந்தாலும், உயர்கல்வியின்போது, தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெறலாம். திருநங்கையர் நலவாரிய உறுப்பினர் அட்டை வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அரசு அறிவித்துள்ளது.



* பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணைத் தேர்வு முடிவுகள், இன்று பிற்பகல் 2:30 மணிக்கு, 'www.dge.tn.gov.in'' இணையதளத்தில்

வெளியாகிறது. தேர்வெண் உள்ளிட்ட விபரங்களை உள்ளிட்டு அறியலாம். மதிப்பெண் நகல் பெற, 275 ரூபாய் செலுத்தி மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Advertisement