பெண்ணிடம் செயின் பறிப்பு
பல்லாவரம்,ஜமீன் பல்லாவரம், எம்.ஜி.ஆர்., தெருவை சேர்ந்தவர் கலைவாணி, 50. முடிச்சூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, ஜமீன் பல்லாவரம், கட்டபொம்மன் நகர், குடிநீர் தொட்டி அருகே நடந்து சென்றார். அப்போது, பின்பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், கலைவாணியின் இரண்டரை சவரன் செயினை பறித்து மாயமானார்.
பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement