சென்னையில் இருந்து குவைத் கிளம்பிய ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு

சென்னை : சென்னையில் இருந்து, குவைத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், ஓடுபாதையில் ஓடத் தொடங்கிய போது, திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. இதனால், அதில் இருந்த 191 பேர் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து குவைத் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், இன்று மாலை 4.05 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 185 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என 191 பேருடன் புறப்பட்டு, ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை, விமானி கண்டுபிடித்தார். உடனடியாக விமானத்தை அவசரமாக ஓடுபாதையிலே நிறுத்தினார். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பிறகு, இழுவை வண்டிகள் மூலம் ஓடுபாதையில் நின்ற விமானம், புறப்பட்டஇடத்துக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.
பயணிகள் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டு, இயந்திர கோளாறு சரி செய்யப்பட்டது. இதன் பின்னர், விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் உடனடி நடவடிக்கை காரணமாக, விமானத்துக்கு ஏற்பட இருந்த பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டு, 191 பேர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று மாலை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்
-
காஷ்மீரில் 'ஆப்பரேஷன் அகல்' நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்வு
-
'நம் உள்ளத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும்'
-
குப்பை சேகரிப்பு பணி நடக்க போன் பண்ணினால் போதும்
-
எஸ்.டி.பி., அமைக்கும் பிரச்னை விளக்க கூட்டம் ஒத்திவைப்பு
-
மாநகராட்சி அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிப்பு