கோடவுனில் தீ விபத்து

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே பிளாஸ்டிக் கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்தன.

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் அருகே ஓமநல்லுாரில், சங்கர பாண்டி என்பவர் பழைய பொருட்களை வாங்கி பிரித்தெடுக்கும் தொழில் செய்து வந்தார். அங்குள்ள கோடவுனில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

நேற்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயுடன் கரும்புகை எழுந்தது. தீயணைப்பு வீரர்கள் போராடி மாலையில் தீயை அணைத்தனர். யாருக்கும் காயமில்லை. பொருட்கள் தீக்கிரையாயின. முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்தனர்.

Advertisement