ராமேஸ்வரத்தில் நாளை நடை அடைப்பு
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வத மண்டக படிக்கு செல்வதால் நாளை (ஆக., 4) கோயில் நடை அடைக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜூலை 19ல் ஆடித் திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 30ல் சுவாமி, அம்மனுக்கு ஆடித் திருக்கல்யாணம் நடந்தது.
இதனைத் தொடர்ந்து நாளை காலை 6:00 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் புறப்பாடாகி வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருள்வர்.
அங்கு மகா தீபாராதனை முடிந்ததும், அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி வீதி உலா வந்து இரவு 10:00 மணிக்கு மீண்டும் கோயிலுக்கு திரும்புவர். இதனால் நாளை முழுவதும் கோயில் நடை அடைக்கப்படும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைத்தட்டல் அவருக்கு சொந்தம் வாங்கித்தருவது நம் வேலை: மோடிக்கு மொழிபெயர்த்தது பற்றி சுதர்சன்
-
தமிழகத்தில் பரவலான மழை; புதுக்கோட்டையில் அதிகம்!
-
ஒரு நாயகன் உதயமாகிறான்...
-
சாதிக்கும் சந்துரு...
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு அச்சம்; வெளியே பூட்டிவிட்டு வீட்டுக்குள் பதுங்கிய இன்ஜினியர்
-
ஓபிஎஸ் என்னை குறை சொல்கிறார்; நான் அவரை குறை சொல்ல மாட்டேன்: நயினார் நாகேந்திரன்
Advertisement
Advertisement