மக்கள் மன்ற நிகழ்ச்சி டி.ஐ.ஜி., குறைகேட்பு

புதுச்சேரி, : அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து, புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதேபோல், நெட்டப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன், ரெட்டியார்பாளைத்தில் எஸ்.பி., வம்சீதர ரெட்டி, போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் எஸ்.பி.,க்கள் செல்வம், மோகன்குமார் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.

இதில், பொது மக்களிடம் இருந்து 83 புகார்கள் பெறப்பட்டு, 51 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மக்கள் மன்றத்தில் மொத்தமாக 37 பெண்கள் உட்பட 191 பேர் பங்கேற்று புகார்களை தெரிவித்தனர்.

Advertisement