நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்: இன்று 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் நாளை அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளதாவது;
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அந்த மாவட்டங்கள் பின் வருமாறு;
தேனி
தென்காசி
தருமபுரி
கிருஷ்ணகிரி
சேலம்
கள்ளக்குறிச்சி
திருவண்ணாமலை
திருப்பத்தூர்
வேலூர்
விழுப்புரம்
ராணிப்பேட்டை
*கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
* கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* தென்காசி, தேனியில் நாளை (ஆக.5) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
* திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நாளை(ஆக.5) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்
-
அயர்லாந்தில் மேலும் ஒரு இந்தியர் மீது தாக்குதல்!
-
நமது ஹீரோக்களுக்கு சபாஷ்: வெற்றிக்குப் பிறகு இந்திய அணியிடம் மன்னிப்பு கோரினார் சசி தரூர்
-
ஷாரூக்கான் தேர்வு எப்படி... என்ன அளவுகோல்... : தேசிய விருது தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி
-
செல்லப்பிராணிகள் நன்கொடை: டென்மார்க் மிருகக்காட்சி சாலை வேண்டுகோள்
-
வெளிநாட்டில் பட்டப்படிப்பு: பெற்றோருக்கு ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை!
-
சீருடையில் கதறும் சிஆர்பிஎப்., பெண் காவலர்: அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ