மனைவியை கொன்று நாடகம் கணவனுக்கு 'காப்பு'
மல்லசமுத்திரம்: மனைவியை கொன்று நாடகமாடிய, போதை கணவனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே மேட்டுப்பாளையம், சத்யா நகரைச் சேர்ந்தவர் தனபால், 44; கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா, 33. தம்பதிக்கு 8, 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட போது, ஆத்திரத்தில் கீதாவின் கழுத்தை நெரித்து தனபால் கொலை செய்துள்ளார். அக்கம்பக்கத்தினரிடம், கீதா துாக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறியுள்ளார். சகோதரி சாவில் சந்தேகம் உள்ளதாக, கீதாவின் அக்கா மல்லசமுத்திரம் போலீசில் புகாரளித்தார்.
பிரேத பரிசோதனையில், கீதா கொலை செய்யப்பட்டது உறுதியானது. போலீசார், தனபாலை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாமகிரிப்பேட்டையில் விபரீதம்; 3 மகள்களை கொன்று தந்தை தற்கொலை
-
ஐகோர்ட் உத்தரவால் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம்... ஒரு நாள் தள்ளிவைப்பு! முதல்வர் தலைமையில் இன்று மீண்டும் பேச்சு நடக்குமா?
-
சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்: சத்குரு
-
டில்லி செங்கோட்டை வளாகத்திற்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது
-
பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் காலமானார்; திரையுலகம் கண்ணீர் அஞ்சலி
-
காசா பகுதியை முழுமையாக ஆக்கிரமிரக்க வேண்டும்; பிணைக்கைதிகளை மீட்க இஸ்ரேல் பிரதமர் தீவிரம்
Advertisement
Advertisement