ராகுலின் கருத்து மக்களை தவறாக வழிநடத்துகிறது: தேர்தல் கமிஷன்

28

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டும் ராகுல் அதில் உறுதியாக இருந்தால், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு கர்நாடக தேர்தல் அதிகாரியிடம் வழங்க வேண்டும் என தலைமைத் தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


டில்லியில் நிருபர்களைச் சந்தித்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டினார். மேலும், கர்நாடக வாக்காளர் பட்டியலில், போலி வாக்காளர்கள், போலி முகவரிகள் என மோசடி நடந்துள்ளது. பாஜவுடன் இணைந்து தேர்தல் கமிஷன் போலியான நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கிறது என தெரிவித்து இருந்தார்.


இது தொடர்பாக தேர்தல் கமிஷன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
Tamil News
ராகுல் தனது கருத்தில் உறுதியாக இருந்தால், அவர், 1960ம் ஆண்டு வாக்காளர்கள் பதிவு சட்டத்தின் விதிகள் 20(3)(b)ன் கீழ், உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போட்டு, அதனை இன்று மாலைக்குள் கர்நாடகாவின் தலைமை வாக்காளர் பட்டியல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


2.ஒரு வேளை தனது குற்றச்சாட்டுகளில் ராகுலுக்கு நம்பிக்கை இல்லை என்றால், அபத்தமான முடிவுகளுக்கு வருவதையும், இந்திய குடிமக்களை தவறாக வழிநடத்துவதையும் நிறுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மேலும், ராகுல் அளிக்க வேண்டிய உறுதிமொழி பத்திரத்தையும் இணைத்துள்ளது.

கடிதம்

இது தொடர்பாக மஹாராஷ்டிரா தேர்தல் அதிகாரி ராகுலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: தேர்தல் நடத்தை குறித்து கவலை தெரிவித்த நிலையில், அதன் முடிவுகள் குறித்து ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தொடர முடியும். இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில், தகுதி வாய்ந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், தகுதி இல்லாதவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளீர்கள். எனவே, இது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்க உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து போட்டு அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement