காங்., நிர்வாகி பிறந்த நாள்

கடலுார்: கடலுாரில் காங்., மாநில செயலாளர் சந்திரசேகரன் பிறந்த நாள் விழா நடந்தது.

கடலுார், செல்லங்குப்பம் முதியோர் இல்லத்தில் காங்., மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன் தனது பிறந்த நாளையொட்டி அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இவருக்கு முன்னாள் மாநில காங்., தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் அமைச்சர் தாமோதரன் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் ரஹீம், வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் இளையபெருமாள், இன்ஜினியர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் தரணிதரன் முன்னிலை வகித்தனர்.

மாநில துணைத் தலைவர் பாண்டுரங்கன், இளைஞர் காங்., மாவட்டத் தலைவர் அருண் பிரகாஷ், மாநில பொதுச் செயலாளர் கலைச்செல்வன், ஓ.பி.சி., பிரிவு மாநில செயலாளர் ராமராஜ், மீனவர் பிரிவு கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ., சண்முகம், குளோப், துணைத் தலைவர் ஆறுமுகம், ராமச்சந்திரன், சேவாதளப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பாலாஜி, சிறுபான்மை பிரிவு பஷீர் அகமது, அப்துல்காதர், அபிபூர் ரகுமான், ஹனிபா, மீனவர் பிரிவு மாநில செயலாளர் புகழேந்தி.

வழக்கறிஞர்கள் உஷாராணி, கெஜலட்சுமி, சீனிவாசன், பார்த்திபன், ரிஷி சக்கரவர்த்தி, தர்மசெல்வன், முன்னாள் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் ஏழுமலை, தாமோதரன், குமாஸ்தாக்கள் பாலாஜி, லட்சுமி, நாராயணன், பெருமாள், ரமேஷ்பாபு, ஊழியர்கள் ஜெயமூர்த்தி, செந்தில்குமார், தினேஷ், விக்கி, அசோக்குமார், இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் ஸ்ரீரங்கன் பிரகாஷ் வாழ்த்தினர்.

Advertisement