அதிபரை கைது செய்ய உதவினால் ரூ.415 கோடி பரிசு

மியாமி: வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்வதற்கு உதவுவோருக்கு, 415 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.




தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில், மூன்றாவது முறையாக நிக்கோலஸ் மதுரோ அதிபராக உள்ளார். இவர், உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்களை சப்ளை செய்வதாகவும், கடந்த 2020ல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.



அவருக்கு எதிராக மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, நிக்கோலஸ் மதுரோவை கைது செய்ய உதவுவோருக்கு, 131 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டது. பின்னர், ஜோ பைடன் அரசு அந்தத் தொகையை 200 கோடி ரூபாயாக உயர்த்தியது.

இவ்வளவு பெரிய பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டபோதிலும், நிக்கோலஸ் மதுரோ தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார்.




இந்நிலையில், தற்போது மதுரோவை கைது செய்வதற்கான பரிசுத் தொகையை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 415 கோடி ரூபாயாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement