செல்லியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை

திருமுக்கூடல்:திருமுக்கூடல், செல்லியம்மன் கோவில் ஆடி மாத விழாவையொட்டி கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடந்தது.
பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திருமுக்கூடலில் செல்லியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், இந்தாண்டிற்கான ஆடி மாத கூழ்வார்த்தல் திருவிழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11:00 மணிக்கு, அப்பகுதி பாலாற்றுக்கு சென்று கலசத்திற்கு புனிதநீர் நிரப்பபட்டது.
அங்கு ஆற்றங்கரை மீதுள்ள எல்லையம்மனுக்கு பல்வேறு பூஜைகளை தொடர்ந்து, கலச புறப்பாடு துவங்கி, செல்லியம்மன் கோவில் வந்தடைந்தது.
அதை தொடர்ந்து மதியம் 1:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் விழா நடைபெற்றது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
-
மேக்னைட் 'கருப்பு எடிஷன்'
-
டாடா 'ஹேரியர், சபாரி' ஆட்வெஞ்சர் ஆப்ரோடிங் செய்ய 'டீசல்' இன்ஜினில் வருகை
-
ஹோண்டா ஷைன் 100 டி.எக்ஸ்., ஸ்டைல், அம்சங்கள் 'அப்கிரேட்'
-
ராஜஸ்தானில் சோகம்; சாலை விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு
-
டில்லி அரசியலில் பரபரப்பை கிளப்பிய கிளப் தேர்தல்!
Advertisement
Advertisement