இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ரோஹித் கிருஷ்ணா!

2


அல்மாட்டி: இந்தியாவின் புதிய கிராண்ட் மாஸ்டர் ஆனார் ரோகித்.


இந்திய செஸ் வீரர் ரோகித் கிருஷ்ணா 20. தமிழகத்தின் சென்னையை சேர்ந்தவர். கடந்த மார்ச் மாதம் சுவீடனில் நடந்த கிராண்ட் மாஸ்டர் தொடரில் 9 சுற்றில் 6.5 புள்ளி எடுத்தார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான முதல் அந்தஸ்தை எட்டினார். அடுத்து துபாய் ஓபன் தொடரில் 9 சுற்றில் 5.5 புள்ளி எடுக்க, இரண்டாவது அந்தஸ்தை அடைந்தார்.

தற்போது கஜகஸ்தானில் அல்மாட்டியில் மண்டல ஓபன் சர்வதேச செஸ் தொடரில் பங்கேற்றார். இதில் ரோகித் கிருஷ்ணா, கடைசி சுற்றில் (9 வது) ஆர்மேனியாவின் ஆர்தர் தவ்த்யனை வென்றார். 6.0 புள்ளி எடுத்து 8வது இடம் பிடித்தார். தவிர, 'பிடே' தரவரிசையில் 15.1 புள்ளி பெற்றார். இதையடுத்து சர்வதேச தரவரிசையில் மொத்தம் 2500 புள்ளிகள் என்ற மைல்கல்லை எட்ட, மூன்றாவது அந்தஸ்தை அடைந்தார்.



தற்போது இந்தியாவின் 89 வது கிராண்ட்மாஸ்டர் ஆனார். இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியாவின் ஆதித்யா, 9 சுற்றில் 5 வெற்றி, 5 'டிரா' செய்து, 6.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் ஆனார்.

Advertisement