நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் 

திருப்பூர்; அவிநாசியில் நடந்த, ரிதன்யா தற்கொலை வழக்கில் விரைந்து நீதி வழங்கக்கோரி, ஹிந்து பாரத் சேனா நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தேசிய தலைவர் ரமேஷ்பாபு தலைமைவகித்தார். மாநில தலைவர் நாகராஜ், பொதுசெயலாளர் ரமேஷ்பாபு, மாநில நிர்வாகி வல்லபை பாலா உள்ளிட்ட நிர்வாகிகள், ரிதன்யா வழக்கில் நீதி கேட்டு பேசினர்.

ஹிந்து திராவிட மக்கள் கட்சி, ஹிந்து பாரத் சேனாவை சேர்ந்தவர்கள், கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Advertisement