இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
டி.என்.பாளையம்:வாய்க்காலில் குளிக்க வந்த, கோவையை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் இருவர் மூழ்கி பலியாகினர்.
கோவை, கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிபிராஜ், 19, சக்தி நிகேஷன், 19, கோவை, பெரிய நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ரிஷிகுமார், 19, ஜெய்ஹரிஷ், 19, மற்றும் வினோத்குமார், 19, ஆகிய ஐந்து பேரும், கோவை தனியார் கல்லுாரி மாணவர்கள்.
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் அருகே அரக்கன்கோட்டை வாய்க்காலில் குளித்தனர்.
வாணிப்புத்துாரில் தொட்டிபாலம் பகுதியில் வாய்க்காலில் மூன்று பேர் கரைக்கு வந்த நிலையில், சிபிராஜ், சக்தி நிகேஷன், ஆழமான பகுதியில் சிக்கினர்.
நீச்சல் தெரியாமல் இருவரும் மூழ்கினர். சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள், இருவரின் சடலங்களையும் மீட்டனர். பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மதுரை மாநகராட்சி மேயர் மாற்றத்தில் தடுமாற்றம்: உள்குத்து அரசியலால் தி.மு.க., தலைமை குழப்பம்
-
மகளை முன்னிறுத்தும் ராமதாஸ்: தீவிர அரசியலில் இறங்கிய மருமகள்
-
இனியும் தோல்வியை சந்திப்பார் பழனிசாமி: சாபம் விடுகிறார் பன்னீர்செல்வம்
-
ஈரோடு அருகே வாய்க்காலில் குளித்த கோவை கல்லுாரி மாணவர்கள் 2 பேர் பலி
-
அம்மன் கோவில் திருவிழா தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
-
'சிவில் சர்வீசஸ் மெயின்ஸ்' தேர்வு கையே
Advertisement
Advertisement