சுதந்திர தினத்தில் கருப்பு சட்டை சர்ச்சை: ஹெச்.எம்., மீது போலீசில் புகார்

பரமக்குடி: சுதந்திர தின விழாவில், தலைமையாசிரியர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றதால் பா.ஜ., வினர் முற்றுகையிட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி எமனேஸ்வரம் எஸ்.என்.வி., அரசு மாதிரி பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு தலைமையாசிரியர் தர்மராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., முருகேசன் தேசியக் கொடி ஏற்றினார்.
தலைமையாசிரியர் கருப்பு சட்டை அணிந்து வந்ததால், பா.ஜ., வினர் கூடி கோஷம் எழுப்பினர். கொடியேற்ற நிகழ்வு நிறைவடைந்து எம்.எல்.ஏ., மற்றும் உடன் வந்த தி.மு.க., வினர் புறப்பட்டனர்.
அப்போது, பா.ஜ., நகர் தலைவர் சுரேஷ்பாபு தலைமையிலான கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்த நிலையில் எம்.எல்.ஏ., தன் காரில் புறப்பட்டார். பின்னர் பா.ஜ.,வினர் கலைந்தனர்.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ் பாபு, பா.ஜ., நகர தலைவர் ஆகியோர் தலைமையாசிரியர் தர்மராஜ் மீது, தேசியக் கொடியை அவமதித்ததாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

















மேலும்
-
கால்சென்டரில் தரவு கசிவு: ரூ.2.6 கோடி கிரெடிட் கார்டு மோசடியில் 18 பேர் கைது
-
தி பெங்கால் பைல்ஸ் பட சர்ச்சை: டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு போலீஸ் தடை
-
குடும்பத்தினரிடம் 'டெமோ' காட்டிய பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானி; நடுவானில் பயணிகள் அதிர்ச்சி!
-
ஹிமாச்சலை புரட்டியெடுக்கும் கனமழை; இதுவரை 257 பேர் பலி
-
இந்தியாவுக்கு கூடுதல் வரியா? டிரம்ப் நிலையில் மாற்றம்
-
உதவி தேடிய பாலஸ்தீனியர்கள் 1760 பேர் கொல்லப்பட்டனர்: ஐநா அறிக்கை