த.வெ.க., மாநாட்டில் பங்கேற்போர் முதலுதவிக்கு ட்ரோனில் மருத்துவ 'கிட்' வியாபாரிகளுக்கு தாம்பூலம் வழங்கி அழைப்பிதழ்

மதுரை: மதுரையில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்த், ஆக., 21ல் நடக்கும் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தாம்பூலம் வழங்கி அழைப்பு விடுத்தார்.

மாநாட்டு பணிகளுக்காக மதுரையில் முகாமிட்டுள்ள ஆனந்த், மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு நேற்று காலை வந்தார்.

அங்கு, ஒவ்வொரு வியாபாரிக்கும் அன்னாசி, ஆப்பிள், மாதுளம், இரு வாழைப்பழங்கள் கொண்ட தாம்பூல தட்டு மற்றும் மாநாட்டிற்கான அழைப்பிதழை கொடுத்து, 'மாநாட்டிற்கு கட்டாயம் வரணும்' என கேட்டுக் கொண்டார்.

மாநாட்டில் நிறைய எண்ணிக்கையில் மக்கள் கூடுவர் என்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, மாநாட்டு வளாகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அந்த இடத்திலேயே முதலுதவி அளிக்க, 'ட்ரோன்' வாயிலாக மருத்துவ, 'கிட்' கொண்டு செல்ல சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.

Advertisement