சூதாட்டம் 14 பேர் கைது
கடலுார்: கடலுார் அருகே பணம் வைத்து சூதாடிய 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த வண்டிக்குப்பம் பகுதியில் நேற்று மாலை சிலர் பணம் வைத்து சூதாடுவதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் கணேஷ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சூதாடிய கும்பலை பிடித்தனர். அதில் சிலர் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து கடலுார், வில்வநகர் தங்கப்பாண்டியன்,30; எஸ்.என்.சாவடி சதீஷ்,23; முதுநகர் கனகசபாபதி,31; மேற்கு ராமாபுரம் ராஜ்குமார்,39; புதுப்பாளையம் ராஜேந்திரன்,38; வண்டிக்குப்பம் சேகர்,42; உட்பட 14 பேரை போலீசார் கைது செய்து, 40 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம், 3 மொபட்டுகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகா அணைகளில் இருந்து 95,000 கனஅடி நீர் திறப்பு; காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
-
மும்பையில் கொட்டி தீர்க்கும் கனமழை; போக்குவரத்து கடும் பாதிப்பு
-
பார்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; சபாநாயகர் ஓம்பிர்லா எச்சரிக்கை; இரு அவைகளும் ஒத்திவைப்பு
-
துணை ஜனாதிபதி தேர்தல் போட்டிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சரியான தேர்வு: அன்புமணி ஆதரவு
-
முதல்வர் ஸ்டாலினை சந்திக்கப்போகிறேன்; நயினார் நாகேந்திரன் அறிவிப்பு
-
3வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பல்; பாகிஸ்தானுக்கு வழங்கியது சீனா
Advertisement
Advertisement