பிரதமரை பற்றி பேசும் அளவுக்கு விஜய் வளரவில்லை: சரத்குமார் காட்டம்

தூத்துக்குடி: ''மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை'' என நிருபர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் இன்று (ஆகஸ்ட் 22) நடைபெறும் பாஜ பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுப் பேசுகிறார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜவை சேர்ந்தவரும், நடிகருமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
அங்கு நிருபர்கள் சந்திப்பில் சரத்குமார் கூறியதாவது: மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் என்று சொல்லக்கூடிய அளவிற்கு நடிகர் விஜய் அரசியலில் வளரவில்லை. பாசிசம் என்றால் அவருக்கு என்ன என்று தெரியுமா என்று தெரியவில்லை. 24ம் தேதி விலாவாரியாக கள்ளக்குறிச்சியில் நான் பேசுகிறேன்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும். என்ன பேசுகிறோம், எதை பேசுகிறோம், யாரைப் பற்றி பேசுகிறோம், எதற்காக பேசுகிறோம் என்று பேச்சில் கவனத்துடன் பேச வேண்டும். நடிகர் விஜய் கொள்கை ரீதியாக பேச வேண்டும். இவ்வாறு சரத்குமார் கூறியுள்ளார்.












மேலும்
-
நகை அணிந்து வந்தால் ரூ.1000 மகளிர் உரிமை தொகை கிடைக்காது: அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கிண்டல்
-
அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை : நீதிமன்றம் உத்தரவு
-
பீஹாரில் தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களை சேர்க்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
பழைய பஞ்சாங்கம் தான்; விஜய் பேச்சு குறித்து அண்ணாமலை விமர்சனம்
-
தொழிலதிபர் ஸ்வராஜ் பால் மரணம்; பிரதமர் இரங்கல்
-
இன்று 10, நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு