கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி

பாலக்காடு: பாலக்காடு அருகே, கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு, கல்லேக்குளங்கரை பகுதியை சேர்ந்த பிளம்பர் சுஜீந்திரன், 53. இவர் நேற்று காலை ரயில்வே காலனி உம்மினி பகுதியிலுள்ள தனியார் ஷாப்பிங் காம்ப்ளக்சில் கழிவுநீர் தொட்டியை அடைத்து, குழாய் சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, கால் தவறி கழிவுநீர் தொட்டியினுள் விழுந்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஹேமாம்பிகா போலீசாரும், தீயணைப்பு படையினரும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து (2)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
23 ஆக்,2025 - 13:01 Report Abuse

0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
23 ஆக்,2025 - 12:21 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்புவது ஆக.,25 முதல் நிறுத்தம்: இந்தியா போஸ்ட்
-
ஆட்டோ மீது கனரக வாகனம் மோதியது: பீஹாரில் 8 பேர் பலி
-
பரமக்குடி அருகே மின்னல் தாக்கி அக்கா, தங்கை பலி
-
7 பதக்கம் வென்றது இந்தியா * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
-
இஸ்ரேலுக்கு எதிரான தடை விவகாரம்: நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ராஜினாமா
-
சட்டவிரோத சூதாட்டம்; கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ கைது: ரூ. 12 கோடி பறிமுதல்
Advertisement
Advertisement