கொட்டமேடு 4 முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை

திருப்போரூர்:கொட்டமேடு நான்கு முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர் -- செங்கல்பட்டு இடையே, கொட்டமேடு சந்திப்பு உள்ளது. இங்கிருந்து, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, திருப்போரூர், மானாமதி என, நான்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. நான்கு புறங்களிலும் தாறுமாறாக வாகன ஓட்டிகள் திரும்பி செல்கின்றனர்.
கொட்டமேடில் சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு, மதுப்பிரியர்களும் அதிக அளவில் வருகின்றனர்.
எனவே, அப்பகுதியில் விபத்தை தவிர்க்க, கொட்டமேடு நான்கு முனை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தென்னிந்தியாவை நோக்கி நகரும் காற்று மாசுபாடு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
-
வார தொடக்கத்தில் சற்று குறைந்தது தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.74,440!
-
8 ஆண்டுகள் கழித்து டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு
-
விண்வெளி சாதனைக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய சுபான்ஷூ சுக்லாவுக்கு உற்சாக வரவேற்பு; தாய் நெகிழ்ச்சி
-
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும்: தூதர் உறுதி
-
கோடநாட்டில் தெருவில் நின்றபோது ஜெயலலிதா என்று சொல்லி இருப்பீர்களா; விஜயை விளாசிய சரத்குமார்
Advertisement
Advertisement