லண்டனில் இந்திய உணவகத்துக்கு தீ வைப்பு; 3 பேர் கவலைக்கிடம்; சதிச்செயலில் ஈடுபட்ட 2 பேர் கைது

4


லண்டன்: லண்டனில் இந்திய உணகத்திற்கு தீ வைக்கப்பட்ட நிலையில், 5 பேர் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


கிழக்கு லண்டனில் இந்திய உணவகம் (இண்டியன் அரோமா) செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் தீ வைக்கப்பட்டு உள்ளது. இந்த தீ விபத்தில் 3 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என மொத்தம் 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 15 வயது சிறுவனும், 54 வயது நபரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: இந்த சம்பவத்தால் மக்கள் கவலையும், அதிர்ச்சியும் அடந்துள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் போலீசாரிடம் சொல்ல வேண்டும். இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Advertisement