முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கிய தமிழக முதல்வர்: நயினார் நாகேந்திரன் புகார்

சென்னை: வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பதில் முதல்வர் ஸ்டாலின், மற்ற முதல்வர்களை காட்டிலும் பின் தங்கி உள்ளதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பிய பயணத்திற்கு முதலில் எனது வாழ்த்துகள். தமிழகத்தின் முதலீடுகளை அதிகரிக்கும் எந்த முயற்சியையும் தமிழக பாஜ சார்பாக வரவேற்கத் தயாராக உள்ளோம்.
ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறி ஒவ்வொரு வருடமும் பல வெளிநாடுகளுக்குப் பயணித்த தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பயணத்தின் பலன் என்ன என்பதையும். ஈர்க்கப்பட்ட முதலீடுகளுக்கான வெள்ளை அறிக்கையையும் வெளியிடாமல் அடுத்த வெளிநாட்டுப் பயணத்திற்கு ஆயத்தமாகியிருப்பது தான் மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது.
காரணம், உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத், இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே சுமார் 7.12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார்.
மஹாராஷ்ரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், டாவோஸ் பயணத்தில் 15 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை அவரது மாநிலத்திற்குக் குவித்துள்ளார்.
தமிழகத்தின் முதலீட்டுக் கதையோ கற்பனையாகவே இன்றளவும் நீள்கிறது. 2022-ல் துபாய் பயணத்தின் போது வெறும் ரூ.6.100 கோடி மதிப்பிலான உடன்படிக்கைகள் கையெழுத்தானது எனத் தமிழக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. மூன்று வருடங்கள் கடந்தும். அவை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பயணித்த போது கையெழுத்தானவை வெறும் காகித உடன்படிக்கைகளாகவே இன்றும் உள்ளன.
உ.பி., மஹா.வோடு ஒப்பிடுகையில் தமிழக முதல்வர் பின்தங்குகிறார்:
மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்ட ஸ்பெயின் பயணம் மூன்று உடன்படிக்கைகளோடு சொற்பமாக முடிந்து விட்டது. அதிலும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை! 2024 அமெரிக்கப் பயணத்தில் ரூ.7,500 கோடி மதிப்பிலான 19 உடன்படிக்கைகள் கையெழுத்தானதாக அரசு கூறினாலும், இதுவரை ஒரு தொழிற்சாலையின் கட்டுமானம் மட்டுமே துவங்கப்பட்டுள்ளது.
கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து வருடாவருடம் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் திமுக அரசின் தொழில் துறையின் ஆற்றலின்மையை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மேலும், செலவை சுருக்கி வரவைப் பெருக்குவதில் பிற மாநில அரசுகளும் முதல்வர்களும் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, இதுநாள் வரை தமிழக முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் பின்னணி என்ன என்பது மக்களுக்குப் புரியாத புதிராகவே உள்ளது.
அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பி ஸ்டார்ட்-அப்
நிறுவனங்களுக்கு ஏற்ற ஆரோக்கியமான சூழலை உருவாக்கி, சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கை செம்மைப்படுத்தினாலே நமது தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படும். ஊழல், முறைகேடு ஆகியவற்றால் துருப்பிடித்துக் கிடக்கும் அரசு இயந்திரத்தைப் பழுது பார்த்தாலே, தொழில் துவங்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்கள்
தமிழகத்திற்குப் படையெடுக்கும்.
இதிலெல்லாம் கவனம் செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக வெற்று விளம்பரங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதால் யாருக்கு என்ன பயன்?
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (15)
Narayanan Muthu - chennai,இந்தியா
30 ஆக்,2025 - 19:46 Report Abuse

0
0
Reply
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
30 ஆக்,2025 - 19:32 Report Abuse

0
0
Reply
ramesh - chennai,இந்தியா
30 ஆக்,2025 - 18:23 Report Abuse

0
0
Reply
AMMAN EARTH MOVERS - ,இந்தியா
30 ஆக்,2025 - 18:13 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
30 ஆக்,2025 - 17:54 Report Abuse

0
0
Reply
Tamilan - ,இந்தியா
30 ஆக்,2025 - 17:42 Report Abuse

0
0
Reply
கணேசன் - ,
30 ஆக்,2025 - 17:35 Report Abuse

0
0
V Venkatachalam - Chennai,இந்தியா
30 ஆக்,2025 - 20:06Report Abuse

0
0
Reply
கொங்கு தமிழன் பிரசாந்த் - ,
30 ஆக்,2025 - 16:49 Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
30 ஆக்,2025 - 18:48Report Abuse

0
0
Reply
Anand - chennai,இந்தியா
30 ஆக்,2025 - 16:33 Report Abuse

0
0
Reply
Sundar R - ,இந்தியா
30 ஆக்,2025 - 16:17 Report Abuse

0
0
Reply
மேலும் 3 கருத்துக்கள்...
மேலும்
-
பெங்களூருவில் சுப்மன் கில் * ஆசிய கோப்பை தொடருக்கு தயாராக...
-
எளிதாக வெல்லுமா இந்தியா * ஆசிய ஹாக்கியில் ஜப்பானுடன் பலப்பரீட்சை
-
ஆசிய ஹாக்கி: தென் கொரியாவுக்கு 'ஷாக்'
-
சிக்கலில் இந்திய பெண்கள் கால்பந்து * மோசமான நிர்வாகத்தால் பாதிப்பு
-
டிராவிட் விலகியது ஏன் * ராஜஸ்தான் அணியில் இருந்து
-
கால்பந்து: இந்தியா அபாரம் * தஜிகிஸ்தானை வீழ்த்தியது
Advertisement
Advertisement