யார் அந்த 14 எம்.பி.,க்கள்; சி.பி.ஆர்., பெற்ற கூடுதல் ஓட்டுகளால் எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி!

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 14 எம்.பிக்கள், சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட தே.ஜ.கூ வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், 452 ஓட்டுகள் பெற்று வென்றார். எதிர்த்துப் போட்டியிட்ட இண்டி கூட்டணியின் சுதர்சன் ரெட்டி 300 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். 15 பேர் செல்லாத வகையில் ஓட்டளித்துள்ளனர்.
மொத்தமுள்ள 781 வாக்காளர்களில், 14 பேர் ஓட்டளிக்கவில்லை. அவர்களில் 7 பேர் பிஜூ ஜனதாதளம் கட்சியினர். 4 பேர் சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ்., கட்சியினர். ஒருவர் அகாலி தளம் கட்சியை சேர்ந்தவர்; மற்ற இருவர் பஞ்சாபை சேர்ந்த சுயேச்சைகள்.
மீதமுள்ள 767 பேர் ஓட்டளித்தனர். இதில், 452 ஓட்டுகளை சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்றார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியின் மொத்த பலம் 427 ஓட்டுகள் மட்டுமே. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 பேரையும் சேர்த்தாலும், மொத்த பலம் 438 மட்டுமே.
அப்படியெனில், மீதமுள்ள 14 பேர் யார் என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கவர்னராக இருந்தவர். அந்த வகையில், அந்த மாநில எம்பிக்களுடன் அவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது. அவர்கள் ஓட்டளித்திருக்கலாம் என்றும், பாஜ நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால், தங்கள் கட்சியினர் யாரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளிக்கவில்லை என்று உத்தரவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியினரும் மறுத்துள்ளனர்.
அதேபோல, ஆம் ஆத்மி கட்சி எம்.பிக்கள் மாற்றி ஓட்டளித்ததாக வெளியான தகவலை அந்த கட்சியும் மறுத்துள்ளது. இதனால், மாற்றி ஓட்டளித்த எம்.பிக்கள் யாராக இருக்கும் என்பது பற்றி, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து (55)
V Venkatachalam - Chennai,இந்தியா
10 செப்,2025 - 22:55 Report Abuse

0
0
Reply
spr - chennai,இந்தியா
10 செப்,2025 - 21:28 Report Abuse

0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
10 செப்,2025 - 21:21 Report Abuse

0
0
Reply
நிக்கோல்தாம்சன் - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,,இந்தியா
10 செப்,2025 - 21:02 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10 செப்,2025 - 20:56 Report Abuse

0
0
Kassalioppilan - Chennai,இந்தியா
10 செப்,2025 - 23:02Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
10 செப்,2025 - 19:49 Report Abuse

0
0
Reply
venkat - CHENNAI,இந்தியா
10 செப்,2025 - 18:33 Report Abuse

0
0
Reply
Sivaram - ,இந்தியா
10 செப்,2025 - 18:30 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
10 செப்,2025 - 17:30 Report Abuse

0
0
பேசும் தமிழன் - ,
10 செப்,2025 - 19:29Report Abuse

0
0
Reply
Rajavel B - ,இந்தியா
10 செப்,2025 - 17:08 Report Abuse

0
0
Reply
மேலும் 43 கருத்துக்கள்...
மேலும்
-
முதல்வரின் சம்பந்தி காலமானார்
-
திருப்பூருக்கு பெருமை: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு புகழாரம்
-
ஏமனில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்; 35 பேர் பலி
-
வனத்துறையினரை கூண்டில் தள்ளிய 5 விவசாயிகள் மீது வழக்கு பதிவு
-
பஸ் நிலையத்தில் கேமராக்கள் இல்லை மகளிர் ஆணைய தலைவி அதிருப்தி
-
சிறுமி பாலியல் பலாத்காரம் வாலிபருக்கு '20 ஆண்டு'
Advertisement
Advertisement