கலெக்டர் அலுவலக ஊழியர் சாலை விபத்தில் பலி

சோழவரம்;திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த ஓட்டுநர் மீது வேன் மோதியதில் உயிரிழந்தார்.
சோழவரம் அடுத்த காந்திநகரைச் சேர்ந்தவர் பாபு, 26. இவர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், ஒப்பந்த அடிப்படையில் அரசு அலுவலர்களின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம், சோழவரம் அடுத்த அலமாதி பகுதியில் இருந்து, செங்குன்றம் நோக்கி 'பஜாஜ் பல்சர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த 'டாடா டிரக்' வாகனம், பாபுவின் பைக் மீது மோதியது. இதில், பாபு பலத்த காயமடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்தார். இதுகுறித்து, செங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காத்மாண்டு கலவரத்தில் இந்தியர்களை காப்பாற்றிய தொண்டைமான்: அன்புமணி பாராட்டு
-
இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப்புலி குட்டி: 70 ஆண்டுக்கு பிறகு இனத்தை பாதுகாக்கும் முயற்சிக்கு கிடைத்த நம்பிக்கை!
-
கனடாவில் இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிடுவோம்; பயங்கரவாதிகள் கொக்கரிப்பு
-
தங்கம் விலை சற்று குறைவு: ஒரு சவரன் ரூ.82,160க்கு விற்பனை
-
ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் 3 பேர் மீது கொலைவெறி தாக்குதல்: திருநெல்வேலியில் பரபரப்பு
-
புகழ்பெற்ற வைஷ்ணோதேவி கோயில் யாத்திரை; 22 நாட்கள் கழித்து இன்று மீண்டும் தொடங்கியது
Advertisement
Advertisement