முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் நினைவு தினம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் 50ம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

அதனையொட்டி, பஸ் நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து வடக்கு வீதியில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சாரதா வித்யாஷ்ரம் பள்ளியின் தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தாளாளர் பிரபு முன்னிலை வகித்தார். உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement