விஜய் வீட்டை முற்றுகையிட்ட திமுக மாணவர் அணி!

சென்னை; சென்னையில் தவெக தலைவர் நடிகர் விஜய் வீட்டை திமுக மாணவர் அணியினர் முற்றுகையிட்டனர்.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 2 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை இதில் அடக்கம். சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.
பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தின் நீட்சியாக, நடிகரும், தவெக தலைவருமான விஜய்யை கைது செய்ய கோரி ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். மறுபுறம், தமிழக போலீஸ் கவனக்குறைவே இதுபோன்ற துயர சம்பவத்தின் காரணமாகி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந் நிலையில், சென்னையில் பனையூரில் உள்ள விஜய் வீட்டை தமிழ் மாணவர் மன்றத்தினர் முற்றுகையிட்டனர். இவர்கள் திமுக மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். விஜய்க்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பிய போராட்டக்காரர்கள், குழந்தைகளின் உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
இவர்களின் கண்டன போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக் கொண்டது.
வாசகர் கருத்து (7)
N Sasikumar Yadhav - ,
28 செப்,2025 - 17:30 Report Abuse

0
0
Reply
Balaa - chennai,இந்தியா
28 செப்,2025 - 17:21 Report Abuse

0
0
Reply
Rajarajan - Thanjavur,இந்தியா
28 செப்,2025 - 17:12 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
28 செப்,2025 - 16:56 Report Abuse

0
0
Reply
Manaimaran - ,
28 செப்,2025 - 16:52 Report Abuse

0
0
Reply
KOVAIKARAN - COIMBATORE,இந்தியா
28 செப்,2025 - 16:47 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இபிஎஸ் பிரசாரத்துக்கு கொடுத்ததை விட விஜய்க்கு அதிக பாதுகாப்பு தரப்பட்டது; ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்
-
கரூர் சம்பவத்தில் யாரும் அரசியல் ஆதாயம் தேடக்கூடாது; திருமா
-
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு முதல் கரூர் சம்பவம் வரை... யார் இந்த அருணா ஜெகதீசன்?
-
கரூர் சம்பவத்தில் பலியான 40 பேரில் 33 பேரின் பெயர் விவரங்கள் வெளியீடு!
-
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
-
நடக்கவே கூடாத துயரம்; யாரையும் குறை சொல்லி பயனில்லை; சீமான் பேட்டி
Advertisement
Advertisement