சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி கோகைன் பறிமுதல்

6


சென்னை: கம்போடியாவில் இருந்து ரூ.35 கோடி மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் கடத்தி வந்த நபர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கம்போடியாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் வந்திறங்கிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது பயணி ஒருவரின் உடைமைகளில், கோகைன் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் மூன்றரை கிலோ எடை கொண்ட அந்த போதைப்பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.35 கோடி.இதையடுத்து அந்த பயணியை கைது செய்து, சுங்கத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement