காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைக்கு விடுமுறை
நாமக்கல் வரும் அக்., 2ல், காந்தி ஜெயந்தியையொட்டி, மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
வரும் அக்., 2ல், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து மதுபான கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி, வரும் அக்., 2ல், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள், அனைத்து பார்களும் முழுமையாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக மதுபானம் விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement