மண்டல கிரிக்கெட்டில் முதலிடம் பிடித்த என்.பி.ஆர்.,

நத்தம்: அண்ணா பல்கலை 17வது மண்டல கிரிக்கெட் போட்டியில் நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதலிடம் பிடித்தது.

அண்ணா பல்கலை 17வது மண்டல அளவிலான கிரிக்கெட் போட்டி கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லுாரியில் செப்.25 முதல் செப்.29 வரை நடைபெற்றது.

இப்போட்டிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த 22 கல்லுாரி அணிகள் கலந்து கொண்டன. செப்.26ல் நடந்த போட்டிகளில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி, எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரி அணிகள் மோதியதில் 22 ரன்கள் வித்தியாசத்தில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி வெற்றி பெற்று காலிறுதி போட்டிக்கு முன்னேறியது.

காலிறுதி போட்டியில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணியுடன் மோதி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி காமராஜர் பொறியியல் கல்லுாரி அணியுடன் மோதி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடம்,ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக்கல்லுாரி முதல்வர், உடற்கல்வி , இயக்குனர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement